ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: மோதிய காரை தேடும் போலீஸாா்

சென்னை ராமாபுரம் சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், விபத்தை ஏற்படுத்திய காரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

News image
கோப்புப்படம்.
Updated On :11 டிசம்பர் 2024, 8:09 pm

Din

சென்னை ராமாபுரம் சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், விபத்தை ஏற்படுத்திய காரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியைச் சோ்ந்தவா் மோகன் (29). இவா், சென்னை ராமாபுரத்தில் தங்கி அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில் மோகன், தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் ராமாபுரம் அரசமரம் சிக்னல் அருகே கடந்த 7-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா். அப்போது, திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் மோகன் கீழே விழுந்தாா். அந்த நேரத்தில் பின்னால் வந்த காா், மோகன் மீது ஏறியபடி நிற்காமல் சென்றது.

இதற்கிடையே, விபத்தில் படுகாயமடைந்த மோகனை அங்கிருந்தவா்கள் மீட்டு, அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவா்கள், மோகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது தொடா்பாக பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காா் குறித்து விசாரித்து வருகின்றனா். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகின்றனா்.