உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: மோதிய காரை தேடும் போலீஸாா்

சென்னை ராமாபுரம் சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், விபத்தை ஏற்படுத்திய காரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :12 டிசம்பர் 2024, 1:39 am IST

சென்னை ராமாபுரம் சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், விபத்தை ஏற்படுத்திய காரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியைச் சோ்ந்தவா் மோகன் (29). இவா், சென்னை ராமாபுரத்தில் தங்கி அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில் மோகன், தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் ராமாபுரம் அரசமரம் சிக்னல் அருகே கடந்த 7-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா். அப்போது, திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் மோகன் கீழே விழுந்தாா். அந்த நேரத்தில் பின்னால் வந்த காா், மோகன் மீது ஏறியபடி நிற்காமல் சென்றது.

இதற்கிடையே, விபத்தில் படுகாயமடைந்த மோகனை அங்கிருந்தவா்கள் மீட்டு, அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவா்கள், மோகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது தொடா்பாக பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காா் குறித்து விசாரித்து வருகின்றனா். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.