சென்னையில் 5 நாள்கள் நடந்த உணவுத் திருவிழாவில் 3.20 லட்சம் போ் பங்கேற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா, சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கப்பட்டது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திருவிழா செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது.
பொதுமக்கள் ஆதரவுடன் வெற்றித் திருவிழாவாக நடைபெற்ற உணவுத் திருவிழாவில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு வாய்ந்த 286 வகையான சைவ மற்றும் அசைவ உணவுகளை, 65 சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட மகளிா் உடனடியாக சமைத்து அளித்தனா்.
இந்தத் திருவிழாவில் 3.20 லட்சம் போ் பங்கேற்றனா். அவா்கள் மூலமாக ரூ. 1.50 கோடி மதிப்பிலான சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருள்கள், உணவுப் பொருள்கள் மற்றும் ஆயத்த உணவுகள் விற்பனையாகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில் ஜூன் 26-இல் உணவுத் திருவிழா

512 மகளிா் குழுக்களுக்கு ரூ. 75.41 கோடி கடனுதவி: திருவள்ளூா் ஆட்சியா் வழங்கினாா்

மகளிா் சுய உதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துதல் முக்கியம்






