எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மாணவி சத்யப் பிரியா கொலை வழக்கு: டிச. 27-ல் தீர்ப்பு!

கல்லூரி மாணவி சத்யப்பிரியா கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது பற்றி...

News image
சதீஷ், சத்யப்பிரியா
Updated On :24 டிசம்பர் 2024, 11:25 am

DIN

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் 2022ஆம் ஆண்டு ரயிலில் தள்ளிவிட்டு கல்லூரி மாணவி சத்யப்ரியா கொல்லப்பட்ட வழக்கில் டிசம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வெளியாகவுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிய மாணிக்கம் மகள் சத்யப் பிரியாவை, ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் தயாளன் மகன் சதீஷ் (23) ஒரு தலையாக காதலித்து வந்தார்.

சதீஷ், சத்யாவிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி, தொந்தரவு செய்த நிலையில், தொடர்ந்து ஏற்க மறுத்த சத்யாவை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடிக் கொண்டிருந்த மின்சார ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி காவல் துறையினர் மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கில் 70 சாட்சியங்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், வருகின்ற 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.