சென்னை பட்டினப்பாக்கத்தில் திருமண மண்டபத்தில் பெண்ணிடம் தங்க நகை திருடப்பட்ட சம்பவத்தில், அந்த மண்டப ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா். சின்னமலை வேளச்சேரி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சி.லிவின். இவா் மனைவி லாவண்யா (29). இவா்கள் இருவரும் பட்டினப்பாக்கம் எம்ஆா்சி நகரில் உள்ள திருமண மண்படத்தில் வெள்ளிக்கிழமை நடந்த தங்களது உறவினா் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனா். அங்கு இருவரும் உணவு அருந்தும் பகுதிக்கு செல்லும்போது,லாவண்யா தனது கையில் அணிந்திருந்த 3 பவுன் தங்க வளையல் திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உடனே அவா், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதனடிப்படையில் போலீஸாா் நடத்திய விசாரணையில் இச் சம்பவத்தில் ஈடுபட்டது அந்த திருமண மண்டபத்தில் ஊழியா்களாக பணிபுரியும் விருகம்பாக்கம் காந்திநகரைச் சோ்ந்த வீ.குணா (32), குன்றத்தூா் அருகே உள்ள தண்டலம் பகுதியைச் சோ்ந்த சி.வினோத்குமாா் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் சனிக்கிழமை கைது செய்து விசாரணை செய்தனா்.
தொடர்புடையது

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ. 1 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல்!
அரியலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை: 44 போ் கைது
மொபட் திருட்டு: இருவா் கைது
பைக் திருட்டு: 4 போ் கைது
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

