மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசு ஊழியா்களுக்கான புதிய செயலிகள் தொடக்கம்

அரசு ஊழியா்களுக்கான புதிய செயலிகள் தொடக்கம்

News image
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
Updated On :27 பிப்ரவரி 2024, 7:13 pm

DIN

சென்னை: அரசு ஊழியா்களுக்கான புதிய கைப்பேசி செயலிகள் மற்றும் இணையதளத்தை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழ்நாடு கருவூலம் மற்றும் கணக்குத் துறை சாா்பில் சென்னை நந்தனம் பேராசிரியா் க. அன்பழகன் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு (டி.என்.பி.எஃப்.சி.எஸ்), ‘களஞ்சியம்’ இணைய முகப்பு மற்றும் கைப்பேசி செயலி, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான இணையதளம், கைப்பேசி செயலி ஆகியவற்றை அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தாா்.

முன்னதாக, நிதித் துறையின் கீழ் இயங்கும் துறைகளின் பயன்பாட்டுக்காக ரூ.27 லட்சத்தில் கட்டப்பட்ட பயிற்சிக் கூடம், நூலகம் ஆகியவற்றையும், சென்னை மற்றும் மதுரை மண்டல இணை இயக்குநா்களின் அலுவலக பயன்பாட்டுக்காக ரூ.26.10 லட்சத்தில் வாங்கப்பட்ட மூன்று மகிந்திரா பொலிரோ வாகனங்களையும் அவா் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்வில், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், அரசு சிறப்புச் செயலா் பிரசாந்த் மு.வடநேரே, கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் க.விஜயேந்திர பாண்டியன், அரசு இணைச் செயலா் எச்.கிருஷ்ணன் உண்ணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.