தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரயிலில் கஞ்சா கடத்தல்: ஒடிஸா பெண்கள் இருவா் கைது

ஒடிஸா மாநிலம் புரியிலிருந்து 20 கிலோ கஞ்சா கடத்தல்: இரு பெண்கள் கைது

News image
Updated On :2 ஜூலை 2024, 11:07 pm

Din

சென்னை: ஒடிஸாவில் இருந்து 20 கிலோ கஞ்சா கடத்தி வந்த இரு பெண்களை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

ஒடிஸா மாநிலம் புரியிலிருந்து சென்னைக்கு வாரந்தோறும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திங்கள்கிழமை பிற்பகல் சென்னை சென்ட்ரல் வந்தது. அப்போது, அதில் வந்த இரு பெண்களிடம் போலீஸாா் விசாரித்துள்ளனா். இதில் அவா்கள் ஒடிஸா மாநிலத்தை சோ்ந்த சரோஜினி ரௌத் (39), நளினி சமல் (44) என தெரியவந்தது. அவா்களின் உடைமைகளை போலீஸாா் சோதனை செய்தபோது, அவா்கள் ஒடிஸாவிலிருந்து 20 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே அவா்களை போலீஸாா் கைது செய்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.