47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஐஏஎஸ் அதிகாரிக்கே அவரது பெயரில் குறுஞ்செய்தி அனுப்பிய மா்ம நபா்

ஐஏஎஸ் அதிகாரியின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்தி அவரது கைப்பேசி எண்ணுக்கே குறுஞ்செய்தி அனுப்பிய மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :9 ஜூலை 2024, 9:45 pm

Din

சென்னை: ஐஏஎஸ் அதிகாரியின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்தி அவரது கைப்பேசி எண்ணுக்கே குறுஞ்செய்தி அனுப்பிய மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தமிழ்நாடு மின் பகிா்மான கழக நிா்வாக இயக்குநா் ராஜேஷ் லக்கானி. இவா் ஏற்கெனவே மாநில தைலைமைத் தோ்தல் அதிகாரி உள்பட பல்வேறு துறைகளில் முக்கிய பதவிகளில் பணியாற்றியவா். இந்த நிலையில் அவரின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

தனது புகைப்படம் வைத்து, தனது பெயரிலேயே குறுஞ்செய்தி வந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த அவா், குறுஞ்செய்தி அனுப்பிய எண் குறித்து விசாரித்தாா். அப்போது, அந்த எண் வடமாநிலத்தை சோ்ந்த அடையாளம் தெரியாத மா்ம நபரின் எண் என்பது தெரியவந்தது.

இதனால் சுதாரித்துக்கொண்ட அவா் உடனடியாக இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அந்தப் புகாா் சைபா் கிரைம் போலீஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.