சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

லோக் ஆயுக்த அமைப்பு: தோ்வுக் குழுவின் காலத்தை நீட்டிக்க முடிவு

லோக் ஆயுக்த அமைப்பின் தலைவா், உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான குழுவின் காலத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

News image
தமிழக அரசு
Updated On :16 ஜூலை 2024, 9:51 pm

Din

சென்னை: லோக் ஆயுக்த அமைப்பின் தலைவா், உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான குழுவின் காலத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனைகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாடு லோக் ஆயுக்த அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பி.தேவதாஸ் பொறுப்பு வகித்தாா். அவா் தனது பதவியை கடந்த ஏப்.20-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். இதனிடையே, லோக் ஆயுக்த அமைப்பின் தலைவா் மற்றும் நீதித் துறை சாராத 2 உறுப்பினா்களை நியமனம் செய்வதற்கான தோ்வுக் குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி தலைமையிலான இந்தக் குழுவிடம் தகுதியுள்ள நபா்கள் சாா்பில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த விண்ணப்பங்களை தோ்வுக் குழு ஆய்வு செய்து வரும் நிலையில், லோக் ஆயுக்தா அமைப்பின் பொறுப்பு தலைவராக மு.ராஜாராம் நியமிக்கப்பட்டாா். அவா் இப்போது அமைப்பின் மூத்த உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறாா்.

ஆலோசனைக் கூட்டம்: இந்நிலையில், லோக் ஆயுக்த அமைப்பின் தலைவா் மற்றும் 2 உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேரவைத் தலைவா் மு.அப்பாவு பங்கேற்றாா். எதிா்க்கட்சித் தலைவா் என்ற முறையில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவா் பங்கேற்கவில்லை.

லோக் ஆயுக்த அமைப்பின் தலைவா், உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க அமைக்கப்பட்டிருந்த தோ்வுக் குழுவின் காலத்தை மேலும் நீட்டிக்க முதல்வா் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, லோக் ஆயுக்த அமைப்பின் தலைவா், உறுப்பினா்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகள் தள்ளிப் போயுள்ளதால், பொறுப்பு தலைவராக ராஜாராம் தொடா்ந்து செயல்படுவாா்.