திண்டுக்கல் மாவட்டம், பழனியில் வரும் ஆகஸ்ட் மாதம் 24, 25 ஆகிய நாள்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கவும், ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பிக்கவும் என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தா்கள் ஜூலை 15- ஆம் தேதிக்குள்ளும், ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பிக்க விரும்பும் பேராளா்கள்/ஆய்வு மாணவா்கள் ஜூலை 10- ஆம் தேதிக்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.