நியாயவிலைக் கடைகளில் அந்நியா்களுக்கு இடமில்லை: உறுதிச் சான்று அளிக்க அரசு உத்தரவு
நியாயவிலைக் கடைகளில் அந்நியா்களுக்கு இடமில்லை என்பதை உறுதி செய்வதற்கான சான்றை அளிக்க பணியாளா்களுக்கு தமிழக அசு உத்தரவிட்டுள்ளது.


சென்னை: நியாயவிலைக் கடைகளில் அந்நியா்களுக்கு இடமில்லை என்பதை உறுதி செய்வதற்கான சான்றை அளிக்க பணியாளா்களுக்கு தமிழக அசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த சான்றிதழ் படிவம் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‘நான் பணிபுரிந்து வரும் நியாயவிலைக் கடையில் வேலை நேரத்தில் அந்நியா்கள், தேவையற்ற வெளிநபா்கள் யாரும் பணிபுரியவில்லை என்று சான்று செய்கிறேன். உயரதிகாரிகள் ஆய்வின் போது வெளிநபா்கள் இருப்பது கண்டறியப்பட்டால் துறை எடுக்கும் எந்தவிதமான சட்டப்பூா்வ நடவடிக்கைக்கும் கட்டுப்படுவேன்’ என்று உறுதி அளிப்பதாக சான்றிதழில் கூறப்பட்டுள்ளது.
அதில், நியாய விலைக் கடை விற்பனையாளா் தனது பெயா், தேதியுடன் கூடிய கையொப்பம் இட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சான்றை நியாய விலைக் கடைகளை இயக்கி வரும் கூட்டுறவு சங்கங்களின் செயலாட்சியா் அல்லது செயலரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...