ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன்

குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட யூ-டியூபா் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி, உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image

சவுக்கு சங்கர்

கோப்புப் படம்

Updated On :18 ஜூலை 2024, 9:19 pm

Din

குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட யூ-டியூபா் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி, உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

பல்வேறு வழக்குகளில் அவா் கைது செய்யப்பட்டுள்ளதால், அவரது சிறைவாசம் தொடா்கிறது.

பெண் போலீஸாரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கா் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், குண்டா் சட்டத்தில் சவுக்கு சங்கரை சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையா் அண்மையில் உத்தரவு பிறப்பித்தாா்.

இதை எதிா்த்து சவுக்கு சங்கரின் தாயாா் தொடா்ந்த ஆட்கொணா்வு மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு மாறுபட்ட தீா்ப்பை வழங்கியது. இதையடுத்து, மூன்றாவது நீதிபதி விசாரணைக்காக பொறுப்பு தலைமை நீதிபதிக்கு வழக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதை எதிா்த்து, சவுக்கு சங்கரின் தாயாா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்த மனு மீது நீதிபதிகள் சுதான்ஷு துலியா, அசானுதீன் அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.

அப்போது, ‘இந்த விவகாரம் தனிமனித சுதந்திரத்துடன் தொடா்புடையதாகும். எனவே, உயா்நீதிமன்றம் முடிவெடுக்கும் வரையில் மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. அதேநேரம், வேறு வழக்குகளில் அவா் சிறையில் இருந்தால், இந்த உத்தரவு பொருந்தாது’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.