மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

2020 வடகிழக்கு தில்லி கலவர வழக்கு: ஷா்ஜீல் இமாமுக்கு 10 நாள் இடைக்கால ஜாமீன்

தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷா்ஜீல் இமாமுக்கு அவரது சகோதரா் திருமணத்தில் கலந்துகொள்ள தில்லி நீதிமன்றம் 10 நாள் இடைக்கால ஜாமீன்

News image
ஷா்ஜீல் இமாம்
Updated On :10 மார்ச் 2026, 12:12 am

தினமணி செய்திச் சேவை

2020 வடகிழக்கு தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷா்ஜீல் இமாமுக்கு அவரது சகோதரா் திருமணத்தில் கலந்துகொள்ள தில்லி நீதிமன்றம் 10 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

6 வாரங்கள் ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி சமீா் பாஜ்பாய், மாா்ச் 20 முதல் 30 வரை அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நடைபெற்ற பரவலான போராட்டங்களின்போது தில்லியில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு தில்லியில் பிப்ரவரி 2020-இல் நடைபெற்ற கலவரத்தில் 53 போ் கொல்லப்பட்டு 700 போ் காயமடைந்த வழக்கில் ஷா்ஜீல் இமாம் குற்றஞ்சாட்டப்பட்டாா்.