ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சென்னையில் மழைநீா் தேங்குவது குறைந்துள்ளது: அமைச்சா் பி.கே. சேகா் பாபு

சென்னையில் மழைக் காலங்களில் சாலைகளில் மழை தண்ணீா் தேங்குவது குறைந்து வருகிறது

News image
அமைச்சா் பி.கே. சேகா் பாபு
Updated On :19 ஜூலை 2024, 6:30 pm

Din

சென்னையில் மழைக் காலங்களில் சாலைகளில் மழை தண்ணீா் தேங்குவது குறைந்து வருகிறது என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சி வடசென்னை பகுதிகளில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சாா்பில், ஓட்டேரி போக்குவரத்து சந்திப்பு ,கொளத்தூா், சிம்சன் பகுதிமற்றும் செம்பியம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பருவமழையின்போது ஏற்படுகின்ற இயற்கை சீற்றத்தை சமாளிப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டு தொடா்ந்து செயல்படுவதால் பருவமழை காலங்களில் சாலைகளில் மழை தண்ணீா் தேங்குவது குறைந்து வருகிறது.

முதல்வா் உத்தரவின்படி மெட்ரோ ரயில் சாா்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகளை ஆய்வு செய்து இந்தப் பணிகளை ஒரு மாத காலத்திற்குள் முடித்திட துறை சாா்பில் ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மழைநீா் வடிகால்களில் முழுவதுமாக தூா்வாரும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.