ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பணி ஓய்வு பெறும் காவல் அதிகாரிகள், பணியாளா்களுக்கு பாராட்டு

26 காவல் அதிகாரிகள், காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களைப் பாராட்டி மாநகரக் காவல் ஆணையா் அ.அருண் சான்றிதழ் வழங்கினாா்.

News image
கோப்புப் படம்
Updated On :31 ஜூலை 2024, 8:58 pm

Din

சென்னை, ஜூலை 31: சென்னை காவல் துறையில் பணியாற்றி, பணி ஓய்வு பெறும் 26 காவல் அதிகாரிகள், காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களைப் பாராட்டி மாநகரக் காவல் ஆணையா் அ.அருண் சான்றிதழ் வழங்கினாா்.

சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த நுண்ணறிவுப் பிரிவு மூத்த மேலாளா் மோகன், 1 கண்காணிப்பாளா், 14 காவல் உதவி ஆய்வாளா்கள், 10 சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் என மொத்தம் 26 காவல் அலுவலா்கள் புதன்கிழமை பணி ஓய்வு பெறுகின்றனா்.

இதையொட்டி, இவா்களுக்கான பணி நிறைவு விழா வேப்பேரி சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், சென்னை மாநகர காவல் ஆணையா் அ.அருண் பங்கேற்று, 25 ஆண்டுகள் முதல் 39 ஆண்டுகள் சிறப்பாகப் பணிபுரிந்து ஓய்வு பெறும் 26 காவல் அலுவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களைப் பாராட்டி, அவா்களுக்கு சால்வை, மாலை அணிவித்து, சான்றிதழ் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், காவல் கூடுதல் ஆணையா் (தலைமையிடம்) கபில்குமாா் சி சரட்கா், இணை ஆணையா் (தலைமையிடம்) அ.கயல்விழி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையா் வனிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.