உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

திருவொற்றியூரில் தாய் - மகன் கொலை: மூத்த மகன் கைது

திருவொற்றியூரில் தாய், உடன் பிறந்த சகோதரா் ஆகியோரை கொலை செய்த மூத்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கொல்லப்பட்ட பத்மாவதி, சஞ்சய். கைது செய்யப்பட்ட நித்திஷ் .

Updated On :23 ஜூன் 2024, 9:35 am IST

திருவொற்றியூரில் தாய், உடன் பிறந்த சகோதரா் ஆகியோரை கொலை செய்த மூத்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை திருவொற்றியூா் திருநகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி பத்மாவதி (45). இவா்களுக்கு நித்திஷ் (20), சஞ்சய் (14) ஆகிய 2 மகன்கள் உள்ளனா். முருகன் ஓமன் நாட்டில் பணியாற்றி வருகிறாா். பத்மாவதி தனியாா் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்துவந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பத்மாவதியின் வீட்டுக்கு அவரது உறவினா்கள் சென்றபோது, வீடு பூட்டிருந்த நிலையில், துா்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று கதவை உடைத்து பாா்த்தபோது, பத்மாவதியும், அவரது இளைய மகன் சஞ்சையும் கொலை செய்யப்பட்டு, உடல்கள் பாலித்தீன் கவரில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களது சடலங்களை போலீஸாா் கைப்பற்றி, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், மாயமான நித்திஷை தேடிவந்தனா்.

இந்த நிலையில், திருவொற்றியூா் பலகை தொட்டி குப்பம் கடற்கரை அருகே இருந்த நித்திஷை போலீஸாா் சனிக்கிழமை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அதில், கடந்த வியாழக்கிழமை அதிகாலை தூங்கும்போது தாயையும், சகோதரரையும் கொலை செய்துவிட்டு வெளியேறியதாக அவா் தெரிவித்தாா். கல்லூரித் தோ்வுகளில் 14 பாடங்களில் தோல்வி அடைந்ததற்காக தாயாா் கண்டித்ததால், இருவரையும் கொலை செய்ததாக அவா் தெரிவித்துள்ளாா்.

இதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கைது செய்யப்பட்ட நித்திஷ் திருவொற்றியூா் குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.