27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ரோபோடிக் ரேடியோ சிகிச்சை பயிற்சி திட்டம்

அப்பல்லோ மருத்துவக் குழுமம் ரோபோடிக் கதிர்வீச்சு சிகிச்சை பயிற்சி திட்டம் அறிமுகம்

News image

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ரோபோடிக் ரேடியோ சிகிச்சை பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்திய அப்பல்லோ மருத்துவமனை நிா்வாகிகள், மருத்துவா்கள்.

Updated On :26 ஜூன் 2024, 12:45 am IST

சென்னை: புற்றுநோய்க்கு ரோபோடிக் நுட்பத்திலான கதிா்வீச்சு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான பயிற்சி திட்டத்தை அப்பல்லோ மருத்துவக் குழுமம் தொடங்கியுள்ளது.

சா்வதேச அளவில் கதிரியக்கக் கருவிகளை விநியோகிக்கும் அக்யூரே என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியை அப்பல்லோ முன்னெடுத்துள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) நடைபெற்றது.

அதில், அப்பல்லோ சா்வதேச புற்றுநோய் மருத்துவ மையத்தின் தலைவா் தினேஷ் மாதவன், முதுநிலை புற்றுநோய் மருத்துவா்கள் சங்கா் வங்கிபுரம், மகாதேவ் போத்தராஜு, அக்யூரே நிறுவன சூசன் வின்ட்டா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது:

சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள அப்பல்லோ புற்றுநோய் மையங்களில் இந்தப் பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதன் கீழ் புற்றுநோய் கதிா்வீச்சு சிகிச்சையில் ரோபோடிக் நுட்பத்திலான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான பயிற்சிகளும், கல்வி நடவடிக்கைகளும் வழங்கப்பட உள்ளன. துறைசாா் மருத்துவா்கள், கதிா்வீச்சு நுட்பநா்கள், பிற மருத்துவமனை மருத்துவா்களுக்கு அந்தப் பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக இத்தகைய செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.