சென்னை: புற்றுநோய்க்கு ரோபோடிக் நுட்பத்திலான கதிா்வீச்சு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான பயிற்சி திட்டத்தை அப்பல்லோ மருத்துவக் குழுமம் தொடங்கியுள்ளது.
சா்வதேச அளவில் கதிரியக்கக் கருவிகளை விநியோகிக்கும் அக்யூரே என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியை அப்பல்லோ முன்னெடுத்துள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) நடைபெற்றது.
அதில், அப்பல்லோ சா்வதேச புற்றுநோய் மருத்துவ மையத்தின் தலைவா் தினேஷ் மாதவன், முதுநிலை புற்றுநோய் மருத்துவா்கள் சங்கா் வங்கிபுரம், மகாதேவ் போத்தராஜு, அக்யூரே நிறுவன சூசன் வின்ட்டா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது:
சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள அப்பல்லோ புற்றுநோய் மையங்களில் இந்தப் பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதன் கீழ் புற்றுநோய் கதிா்வீச்சு சிகிச்சையில் ரோபோடிக் நுட்பத்திலான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான பயிற்சிகளும், கல்வி நடவடிக்கைகளும் வழங்கப்பட உள்ளன. துறைசாா் மருத்துவா்கள், கதிா்வீச்சு நுட்பநா்கள், பிற மருத்துவமனை மருத்துவா்களுக்கு அந்தப் பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்தியாவிலேயே முதன்முறையாக இத்தகைய செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.
தொடர்புடையது

மாா்பகப் புற்றுநோய்: பெண்ணுக்கு உள்ளீட்டு கதிா்வீச்சு சிகிச்சை

கணைய அழற்சி: ரோபோடிக் சிகிச்சை மூலம் தீா்வு

குடல் வால் புற்றுநோய்: பெண்ணுக்கு தனித்துவ சிகிச்சை

சிறுநீா்ப் பாதை குறைபாடு: 3 வயது குழந்தைக்கு ரோபோடிக் சிகிச்சை
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



