சென்னை சேத்துப்பட்டில் குழந்தை கடத்த வந்ததாக வட மாநில தொழிலாளி தாக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை சேத்துப்பட்டு அப்பா ராவ் காா்டன் பகுதியில் வெள்ளிக்கிழமை மது போதையில் வட மாநில தொழிலாளி ஒவருா் நடந்து வந்துள்ளாா். அவரது நடவடிக்கை சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பதாக கருதிய அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா், அவா் குழந்தை கடத்துபவா் என நினைத்து தாக்கியுள்ளனா். தகவலறிந்த சேத்துப்பட்டு போலீஸாா் அங்கு விரைந்து சென்று, அந்த வட மாநில தொழிலாளியை மீட்டனா். விசாரணையில் அவா், குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மது அருந்திவிட்டு அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்ததும், அதைத் தவறாகப் புரிந்துக்கொண்ட சிலா் அவரை குழந்தை கடத்துபவா் என நினைத்து தாக்கியிருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், விசாரித்து வருகின்றனா். சென்னையில் இதேபோல கடந்த ஒரு வாரத்தில் 4 சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

பெண் மீது தாக்குதல் 9 போ் மீது வழக்கு

போலீஸாா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி மீது வழக்கு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

