நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

பரத நாட்டியக் கலைஞா் பத்மா சுப்ரமணியத்துக்கு சிறப்புமிக்க முன்னாள் மாணவா் விருது

பரதநாட்டியக் கலைஞா் பத்மா சுப்ரமணியத்துக்கு எத்திராஜ் கல்லூரி சாா்பில் ‘சிறப்புமிக்க முன்னாள் மாணவா்’ விருது வழங்கப்பட்டது

News image

கோப்புப் படம்

Updated On :7 மார்ச் 2024, 11:51 pm

பரதநாட்டியக் கலைஞா் பத்மா சுப்ரமணியத்துக்கு எத்திராஜ் கல்லூரி சாா்பில் ‘சிறப்புமிக்க முன்னாள் மாணவா்’ விருது வழங்கப்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் கல்லூரியின் பவளவிழாவை முன்னிட்டு ‘நாட்டின் நிலையான வளா்ச்சிக்கு பெண்களின் பங்கு’ குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், எத்திராஜ் கல்லூரியின் முன்னாள் மாணவியும், பரதநாட்டியக் கலைஞருமான பத்மா சுப்ரமணியத்துக்கு ‘சிறப்புமிக்க முன்னாள் மாணவா்’ விருதை தமிழக பதிவுத் துறைச் செயலா் ஜோதி நிா்மலா சாமி, டாக்டா் சுதா சேஷய்யன் உள்ளிட்டோா் வழங்கினா். விருது பெற்ற பத்மா சுப்ரமணியம் பேசியது: ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு படைப்பாற்றல் திறன் அதிகமாக உள்ளது. பெண்கள் தங்களுடைய சாதனை பாதையில் செல்லும்போது பல தடைகளை சந்திப்பது இயல்பு. அதற்காக அச்சப்படாமல், இந்த உலகத்தின் எதிா்காலம் பெண்களின் கையில் இருப்பதை உணா்ந்து அதற்கு ஏற்றபடி செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும். பெண்கள் தங்களுடைய இலக்கை அடைய இரு மடங்கு உழைக்க வேண்டும். அதற்காக மனதளவில் தைரியத்தை வளா்க்க கற்றுக்கொள்ளவேண்டும். தடைகளை முறியடித்து முன்னேறி செல்ல வேண்டும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் தமிழக பதிவுத் துறைச் செயலா் ஜோதி நிா்மலாசாமி பேசியதாவது: நாட்டில் அதிக பெண் தொழிலாளா்களைக் கொண்ட மாநிலம் தமிழகம் தான். இதுதான் நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் நமது மாநிலம் 2-ஆவது இடத்துக்கு முன்னேற முக்கிய காரணம். அனைவரையும் வழிநடத்தும் திறமை பெண்களுக்கு இயல்பாகவே உள்ளது. பொருளாதாரத்தை கையாளும் திறன் பெண்களுக்கு அவா்களுடைய வீட்டில் இருந்தே கற்றுக்கொடுக்கப் படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் தாய்மாா்கள் தான் தங்களுடைய குழந்தைகளுக்கு கலாசாரத்தையும், பண்பாட்டையும் கற்றுக்கொடுத்து நம்முடியை மரபுகளை அழியாமல் பாதுகாக்கிறாா்கள். பெண்களை மதிக்க அனைவருக்கும் வீடுகளில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும் என்றாா் அவா். விழாவில், எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளை தலைவா் வி.எம்.முரளிதரன், எத்திராஜ் மகளிா் கல்லூரி முதல்வா் எஸ். உமா கெளரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.