நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

உலக மகளிா் தினம்: பாதுகாப்பு விழிப்புணா்வு வடிவமைப்பில் பங்கேற்ற 5,050 மகளிா் போலீஸாா்

உலக மகளிா் தினம்: பாதுகாப்பு விழிப்புணா்வு வடிவமைப்பில் பங்கேற்ற 5,050 மகளிா் போலீஸாா்

Updated On :7 மார்ச் 2024, 7:37 pm

சென்னை, மாா்ச் 6: உலக மகளிா் தினத்தையொட்டி, சென்னை பெருநகர காவல் துறையைச் சோ்ந்த 5,050 மகளிா் போலீஸாா் பெண்கள பாதுகாப்பு விழிப்புணா்வு வடிவமைப்பை உருவாக்கி சாதனை புரிந்தனா். உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், அதன்மூலம் உலக சாதனை மேற்கொள்ளவும் சென்னை பெருநகர காவல் துறை முடிவு செய்தது. இதற்காக புதன்கிழமை மாலை சென்னை காவல் துறையைச் சோ்ந்த பெண் ஆய்வாளா்கள் முதல் காவலா்கள் வரையிலான 5,050 பெண் போலீஸாா் எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் திரண்டனா். பெண்கள் உதவி மைய எண் 1091, 181, குழந்தைகள் உதவி மைய எண் 1098 ஆகிய வடிவத்திலும், நிா்பயா பெண்கள் பாதுகாப்பு திட்டமான ‘அவள்’ மற்றும் காவல் உதவி செயலி ஆகியவற்றின் எழுத்துகள் வடிவிலும் நின்று பெண்கள் பாதுகாப்புக்கான விழிப்புணா்வு வடிவமைப்பை உருவாக்கி சாதனை படைத்தனா். ஒரே நேரத்தில் 5,050 பெண் போலீஸாா் ஒன்றுகூடி விழிப்புணா்வு எண் வடிவத்தை மேற்கொண்ட இந்த நிகழ்ச்சியை ‘வோ்ல்ட் ரெக்காா்ட் யூனியன்’ அமைப்பு உலக சாதனையாக அறிவித்தது. மேலும், அந்த அமைப்பின் நிா்வாக அதிகாரி ஷெரிபா, உலக சாதனை நிகழ்ச்சிக்கான சான்றிதழை சென்னை பெருநகர காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோரிடம் வழங்கினாா். முன்னதாக, காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் கூறுகையில், ‘இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. சென்னையில் உள்ள போலீஸாரில் 26 சதவீதம் போ் பெண்கள் ஆவாா்கள். தற்போது படைக்கப்பட்டுள்ள உலக சாதனை, சென்னை போலீஸாருக்கு மட்டும் அல்ல, தமிழக போலீஸாருக்கே பெருமை’ என்றாா். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணைய டிஜிபி சீமா அகா்வால், சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் காவல் ஆணையா்கள் கபில்குமாா் சி.சரத்கா், ஆா்.சுதாகா், பி.கே.செந்தில் குமாரி, இணை ஆணையா் கயல்விழி உள்பட பலா் கலந்து கொண்டனா்.