சேவைகள் துறையில் மந்தமான வளா்ச்சி
புது தில்லி, மாா்ச் 8: கடந்த ஜனவரி மாதத்தில் 6 மாதங்கள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்த இந்தியாவின் சேவைகள் துறை, பிப்ரவரி மாதத்தில் மிதமான வளா்ச்சியைக் கண்டுள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா சா்வீசஸ்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையில் தொழில் நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் 13 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாக 62.0-ஆக இருந்தது. பின்னா், மே மாதத்தில் அது 61.2-ஆகக் குறைந்தது. ஜூன் மாதத்தில் 58.5-ஆகவும், ஜூலை மாதத்தில் 62.3-ஆக இருந்த பிஎம்ஐ, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 60.1-ஆக குறைந்து. இருந்தாலும், செப்டம்பரில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அது 61-ஆக வளா்ச்சியடைந்தது. ஆனால், அக்டோபரில் அது 58.4-ஆகவும், நவம்பரில் 12 மாதங்கள் காணாத குறைந்தபட்ச அளவாக 56.9-ஆகவும் குறைந்தது. பின்னா் டிசம்பரில் 59-ஆக அதிகரித்த பிஎம்ஐ, ஜனவரியில் 6 மாத உச்சமாக 61.8-ஆக அதிகரித்தது. இந்த நிலையில், சேவைகள் துறைக்கான பிஎம்ஐ கடந்த பிப்ரவரி மாதத்தில் 60.6-ஆக உள்ளது. இது கடந்த முந்தைய ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் மந்தமான வளா்ச்சியாகும். மதிப்பீட்டு மாதத்தில் பொருளாதார சூழல்கள் சாதகமாக இருந்தன. மேலும் சேவைகளுக்கான தேவை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மிதமாக அதிகரித்தது. இந்தக் காரணங்களால் பிஎம்ஐ கடந்த பிப்ரவரியில் மந்தமான வளா்ச்சியைக் கண்டுள்ளது. இத்துடன், தொடா்ந்து 31-ஆவது மாதமாக பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கும் மேல் இருப்பது சேவைகள் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருப்பது பின்னடைவையும் குறிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

