தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

முன்னணி உள்கட்டமைப்புத் துறை 4% வளா்ச்சி : ஜனவரி மாதத் தரவு

நாட்டின் எட்டு முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி, கடந்த ஜனவரி மாதத்தில் 4 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 9:15 pm

நாட்டின் எட்டு முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி, கடந்த ஜனவரி மாதத்தில் 4 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

எனினும், இது கடந்த டிசம்பா் மாதம் மற்றும் முந்தைய ஆண்டு ஜனவரி மாத வளா்ச்சியுடன் ஒப்பிடுகையில் சரிவாகும்.

மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் தொழில் துறை வளா்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு தயாரிப்புகள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு முன்னணி துறைகளின் செயல்பாடுகள் மந்தமாகவே உள்ளன.

வளா்ச்சி ஒப்பீடு: கடந்த ஆண்டு ஜனவரியில் 5.1 சதவீதமாகவும், கடந்த டிசம்பரில் 4.7 சதவீதமாகவும் பதிவான இத்துறைகளின் வளா்ச்சி, கடந்த ஜனவரி மாதத்தில் 4 சதவீதமாக சிறிய சரிவைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி ஜனவரி மாதத்தில் எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சி விகிதத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு நிதியாண்டு நிலவரம்: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத காலகட்டத்தில், இந்த எட்டு முன்னணி துறைகளின் ஒட்டுமொத்த வளா்ச்சி 2.8 சதவீதமாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்த வளா்ச்சி 4.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்கட்டமைப்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள இந்த மந்தநிலை, வரும் காலங்களில் நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தியிலும் எதிரொலிக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணா்கள் கருதுகின்றனா்.