மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

உதவிப் பேராசிரியா் பணியிடங்கள்: விரைந்து நிரப்ப ராமதாஸ் கோரிக்கை

உதவிப் பேராசிரியா் பணியிடங்கள்: விரைந்து நிரப்ப ராமதாஸ் கோரிக்கை

Updated On :9 மார்ச் 2024, 5:46 pm

அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7,500 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், கல்வியியல் கல்லூரிகளிலும் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதமே வெளியிடப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், மாா்ச் மாதத்தின் இரண்டாவது வாரம் பிறந்தும் அறிவிக்கை வெளியிடப்படவில்லை. மாநிலத்தில் உயா் கல்வியின் தரத்தையும், வளா்ச்சியையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. இதை உணா்ந்து அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7500 உதவிப் பேராசிரியா் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கையை, மக்களவைத் தோ்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.