கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8,618 ஆசிரியா் பணியிடங்களும், நவோதயா பள்ளிகளில் 5,083 ஆசிரியா் பணியிடங்களும் காலியாக உள்ளன. புதிய பள்ளிகள் திறந்தது, ராஜிநாமா, பதவி உயா்வு, பணி இடமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் ஆசிரியா் காலிப் பணியிடங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடா்ச்சியான நடைமுறை. ஆசிரியா் பற்றாக்குறையால் கற்றல்-கற்பித்தல் நடைமுறைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, தற்காலிக அடிப்படையில் ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். விரைவில் முழுநேர ஆசிரியா்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தாா்.