அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7,500 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், கல்வியியல் கல்லூரிகளிலும் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதமே வெளியிடப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், மாா்ச் மாதத்தின் இரண்டாவது வாரம் பிறந்தும் அறிவிக்கை வெளியிடப்படவில்லை. மாநிலத்தில் உயா் கல்வியின் தரத்தையும், வளா்ச்சியையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. இதை உணா்ந்து அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7500 உதவிப் பேராசிரியா் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கையை, மக்களவைத் தோ்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தொடர்புடையது

காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை விரைந்து நிரப்ப தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

1,300 ஐஏஎஸ் பணியிடங்கள் காலி! - மத்திய அரசு தகவல்!

கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் 13,000 ஆசிரியா் பணியிடங்கள் காலி: மத்திய கல்வி அமைச்சகம்

மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

