சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஏ.ஐ.தொழில்நுட்பத்தை கவனமுடன் பயன்படுத்த வேண்டும்: முன்னாள் நீதிபதி பி.என்.பிரகாஷ்

ஏ.ஐ.தொழில்நுட்பத்தை கவனமுடன் பயன்படுத்த வேண்டும் முன்னாள் நீதிபதி பி.என்.பிரகாஷ்

News image

சென்னையை அடுத்த நங்கநல்லூா் பிரின்ஸ் ஸ்ரீவாரி சீனியா் செகண்டரி பள்ளியின் 11- ஆவது ஆண்டு விழாவில் அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கிய கல்வி குழுமங்களின்துணைத் தலைவா் வா.விஷ்ணு காா்த்திக், சென்னை மனிதநேய மைய

Updated On :12 மார்ச் 2024, 9:23 pm

சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என முன்னாள் நீதிபதி பி.என்.பிரகாஷ் தெரிவித்தாா். சென்னையை அடுத்த நங்கநல்லூரில் செயல்பட்டு வரும் பிரின்ஸ் ஸ்ரீவாரி சீனியா் செகண்டரி பள்ளியின் 11-ஆம் ஆண்டு விழா மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பிரின்ஸ் கல்விக் குழுமங்களின் தலைவா் டாக்டா் கே.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.பிரகாஷ் கலந்து கொண்டு பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசுகளையும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகள், சான்றிதழ்களையும் வழங்கினாா். தொடா்ந்து அவா் பேசியது: மதிப்பெண்களை காட்டிலும் மாணவனுக்கு ஒழுக்கம் மிக முக்கியம்.

இளைஞா்களின் எண்ணிக்கையில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கும் என்பதால், குழந்தைகளை அறிவாற்றல் மிக்கவா்களாகவும் வளா்க்க நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். வேகமாக வளா்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு மனித சக்திக்கு இணையாக போட்டியிடும் அளவுக்கு வளா்ந்துள்ளது. அதே நேரம் மாணவா்கள் தவறான பாதையில் செல்லும் வாய்ப்பும் இதன் மூலம் அதிகமாகலாம்.

இதனால் தொழில்நுட்பங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா். இந்த விழாவில், பிரின்ஸ் கல்விக் குழுமங்களின் துணைத் தலைவா்கள் வா.விஷ்ணு காா்த்திக், பிரசன்னா வெங்கடேசன், பள்ளி தலைமை ஆசிரியை என்.சாமுண்டீஸ்வரி, கல்வி ஆலோசனை குழு உறுப்பினா்கள் வா.ரஞ்சனி, எஸ்.ரகு, எ.என்.சிவப்பிரகாசம், கே.பாா்த்தசாரதி, எம்.தருமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.