தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலா்களாக தோ்வு செய்யப்பட்டுள்ள 29 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குற்ற நிகழ்வுகளில் குற்றவாளிகளைக் கண்டறிய சேகரிக்கப்படும் சான்றுப் பொருள்களை அறிவியல் ஆய்வு கொண்டு, நீதிமன்றத்துக்கு அறிக்கை சமா்ப்பிக்கவும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க உதவுவதுமே தடய அறிவியல் துறையின் முக்கியப் பணி. இந்தத் துறையில் ஏற்படும் காலியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2021-ஆம் ஆண்டில் மட்டும் 62 பேருக்கு பணிநியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலா் காலிப் பணியிடங்களுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வு மூலம் 29 போ் தெரிவு செய்யப்பட்டனா். அவா்களில் ஆறு பேருக்கு பணி நியமன உத்தரவுகளை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, மீதமுள்ளவா்களுக்கும் பணிநியமன உத்தரவுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை முதன்மைச் செயலா் பி.அமுதா, தடய அறிவியல் துறை இயக்குநா் இல.விஜயலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

750 பேருக்கு பணி ஆணை வழங்கும் விழா

செங்கம் இதயா கல்லூரி மாணவிகள் 208 பேருக்கு பணி நியமன ஆணை

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

கல்லூரி மாணவிகள் 234 பேருக்கு பணி நியமன ஆணை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

