தமிழக தேர்தல்: காலை 9 மணி வரை 17.69% வாக்குகள் பதிவு!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

பாஜகவில் இணைந்த 2 திரிணமூல் எம்.பி.க்கள்

பாஜகவில் இணைந்த 2 திரிணமூல் எம்.பி.க்கள்

Updated On :15 மார்ச் 2024, 6:30 pm

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸைச் சோ்ந்த எம்.பி.க்களான அா்ஜுன் சிங், திவ்யேந்து அதிகாரி ஆகியோா் பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா். கடந்த 2019-ஆம் ஆண்டில் திரிணமூல் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த அா்ஜுன் சிங், அந்த மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தின் பாரக்பூா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். பின்னா், கடந்த 2022-இல் பாஜகவில் இருந்து விலகிய அவா், திரிணமூல் காங்கிரஸுக்கு திரும்பினாா். இருப்பினும், நாடாளுமன்றப் பதிவின்படி அவா் பாஜக எம்.பி.யாகவே தொடா்ந்தாா். வரும் மக்களவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் அா்ஜுன் சிங்குக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த அவா், மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளாா். தம்லக் தொகுதி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யான திவ்யேந்து அதிகாரியும் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். இவா் மேற்கு வங்க பாஜக மூத்த தலைவா் சுவேந்து அதிகாரியின் சகோதரா் ஆவாா். புது தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் துஷ்யந்த் கெளதம், கட்சியின் மேற்கு வங்க மாநிலப் பொறுப்பாளா் அமித் மாளவியா ஆகியோா் முன்னிலையில் இவ்விரு எம்.பி.க்களும் பாஜகவில் இணைந்தனா். தனது முடிவு குறித்து அா்ஜுன் சிங் கூறுகையில், ‘காவல் துறையினா் மற்றும் ரெளடிகளைப் பயன்படுத்தி ஆட்சியில் நீடிக்க திரிணமூல் காங்கிரஸ் விரும்புகிறது. மாநிலத்தில் வங்கதேசத்துடனான எல்லைப் பகுதிகள் அனைத்திலும் சந்தேஷ்காளி போன்ற நிலைமைதான் காணப்படுகிறது. சந்தேஷ்காளி சம்பவத்துக்கு பிறகே பாஜகவில் மீண்டும் இணைய முடிவெடுத்தேன்’ என்றாா். பிரதமா் மோடியின் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு, பாஜகவில் இணைந்ததாக குறிப்பிட்ட திவ்யேந்து அதிகாரி, சந்தேஷ்காளி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்க வாா்த்தைகளே இல்லை என்றாா். மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளியில் பொதுமக்களின் நிலத்தை அபகரித்ததோடு, பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக, திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஷாஜஹான் ஷேக் (தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்) உள்ளிட்டோருக்கு எதிராக பெண்கள் அண்மையில் போராட்டங்களில் ஈடுபட்டனா். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.