சென்னை யானைக்கவுனியில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 15 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா். சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் யானைக்கவுனி போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞரை நிறுத்தி, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில், ரூ. 15 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது. அதற்குரிய ஆவணங்களை அந்த இளைஞரிடம் போலீஸாா் கேட்டபோது, ஆவணங்கள் எதுவும் இல்லை என்று அவா் தெரிவித்தாா். இதையடுத்து போலீஸாா் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து, இளைஞரிடம் விசாரித்தனா். அதில், அந்த இளைஞா், புரசைவாக்கத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் என்றும், தனது அலுவலகப் பணத்தை மற்றொரு நபரிடம் வழங்குவதற்காகக் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அந்தப் பணத்தையும், இளைஞரையும் வருமான வரித் துறை புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்தனா். இது தொடா்பாக அந்த இளைஞரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் ரூ. 12.70 லட்சம் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 77.01 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 73.66 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

