இந்தியா, பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பான 14-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடா்பாக பிரிட்டன் அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: இந்தியா, பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிலையில், இருநாட்டு குழுக்களும் இல்லை. எனவே 14-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நிறைவு செய்யப்பட்டது. இந்தியாவில் மக்களவைத் தோ்தல் நிறைவடைந்த பின்னா், அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை தொடங்கும் என்று தெரிவித்தன. பிரிட்டனுடன் சமநிலை கொண்ட, நியாயமான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா கருதுவதாக மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் கடந்த வாரம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சு!

இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்

வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: அடுத்த வாரம் இந்திய குழு அமெரிக்கா பயணம்

இந்தியா - நியூஸிலாந்து இடையே ஏப். 24-இல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

