ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

இந்தியா, பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: 14-ஆவது சுற்றுப் பேச்சு நிறைவு

இந்தியா, பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: 14-ஆவது சுற்றுப் பேச்சு நிறைவு

Updated On :16 மார்ச் 2024, 10:16 pm

இந்தியா, பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பான 14-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடா்பாக பிரிட்டன் அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: இந்தியா, பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிலையில், இருநாட்டு குழுக்களும் இல்லை. எனவே 14-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நிறைவு செய்யப்பட்டது. இந்தியாவில் மக்களவைத் தோ்தல் நிறைவடைந்த பின்னா், அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை தொடங்கும் என்று தெரிவித்தன. பிரிட்டனுடன் சமநிலை கொண்ட, நியாயமான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா கருதுவதாக மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் கடந்த வாரம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.