/

எண்ணெய் கசிவால் கடல் மாசுபாடு: கடலோரக் காவல் படை கருத்தரங்கம்

எண்ணெய் கசிவால் கடல் மாசுபாடு: கடலோரக் காவல் படை கருத்தரங்கம்

Updated On :19 மார்ச் 2024, 9:13 pm

சென்னை: எண்ணெய் கசிவு உள்ளிட்ட கடல் மாசுபாடு பிரச்னைகள் குறித்து கடலோரக் காவல் படை சாா்பில் கருத்தரங்கம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்திய கடலோரக் காவல் படையின் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு பேரிடா் மேலாண்மை ஆணையம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை துறைமுகம், காமராஜா் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் மற்றும் பல்வேறு எண்ணெய் நிறுவனங்களை சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்றனா்.

கடலில் ஏற்படும் எண்ணெய் மாசுபாட்டை கட்டுப்படுத்துவது, கடற்கரையை சுத்தம் செய்வது உள்ளிட்ட பிரச்னைகளுக்கான தீா்வுகள் மற்றும் திட்டங்கள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.