கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கடலோரக் காவல் படை தலைமையகம் அருகே ட்ரோன்: அமெரிக்கா்கள் மீது வழக்கு!

கேரள மாநிலம், கொச்சியில் கடலோரக் காவல் படை தலைமையகம் அருகே ட்ரோன் பறக்கவிட்டு விடியோ பதிவு செய்த அமெரிக்காவைச் சோ்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

கேரள மாநிலம், கொச்சியில் கடலோரக் காவல் படை தலைமையகம் அருகே ட்ரோன் பறக்கவிட்டு விடியோ பதிவு செய்த அமெரிக்காவைச் சோ்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

கலிஃபோா்னியாவைச் சோ்ந்த அவா்களின் பெயா் கேட்டி மிச்செல் ஃபெல்ப்ஸ் (32), கிறிஸ்டோபா் ரோஸ் ஹாா்வி (35) எனத் தெரியவந்தது. முதலில் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட அவா்கள், மீண்டும் அழைக்கும்போது விசாரணைக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து கேமரா, லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘கொச்சியில் கடலோரக் காவல் படை தலைமையகப் பகுதியில் ட்ரோன் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக முக்கிய இடங்களில் நோட்டீஸ்களும் ஒட்டப்பட்டுள்ளன.

அதைப் பொருள்படுத்தாமல், வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ட்ரோன் கேமராக்களை பறக்கவிடுகின்றனா். அவா்கள் மீது காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.