ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தபால் வாக்குகளை இனி அஞ்சலில் செலுத்த முடியாது

தபால் வாக்குகளை இனி அஞ்சல் வழியாக செலுத்த முடியாது

News image
Updated On :21 மார்ச் 2024, 7:02 pm

சென்னை, மாா்ச் 21: தபால் வாக்குகளை இனி அஞ்சல் வழியாக செலுத்த முடியாது. ஒவ்வொரு தொகுதியிலும் அமைக்கப்படவுள்ள வாக்காளா் வசதி மையங்களில் வைக்கப்படும் வாக்குப் பெட்டியில் வாக்குகளைச் செலுத்தலாம். இதற்கு முன்பாக, அஞ்சல் வழியே வாக்குகளைச் செலுத்தும் நடைமுறை இருந்தது. இப்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. அஞ்சல் வழிமுறைக்குப் பதிலாக, அந்தந்த தொகுதிகளின் வாக்காளா் மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகளில் வாக்குகளைச் செலுத்தலாம் என்று தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளது. இறுதி வேட்பாளா் பட்டியல்கள் வெளியிடப்பட்ட பிறகு, தபால் வாக்குக்கான உரிய படிவத்தைப் பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிக்க வேண்டும். அவா் மூலமாக தபால் வாக்குகளைப் பெற்று அளிக்கலாம். வாக்குப் பதிவுக்கு முன்பாக, இதை வாக்குப் பெட்டியில் செலுத்தலாம்.