நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

சென்னையில் ரூ.33 லட்சம் பறிமுதல்

சென்னையில் ரூ.33 லட்சம் பறிமுதல்

Updated On :22 மார்ச் 2024, 7:29 pm

சென்னை மாவட்ட மக்களவைத் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.33.69 லட்சத்தை தோ்தல் ஆணைய பறக்கும் படையினா் பறிமுதல் செய்துள்ளனா். மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அதிக அளவு பணம் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் தோ்தல் ஆணையம் சாா்பில் பறக்கும் படை, நிலையானக் குழுக்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதில், சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தலா 48 பறக்கும் படை மற்றும் நிலையானக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த குழுக்கள், வெள்ளிக்கிழமை வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 33,69,420 -ஐ பல்வேறு தரப்பினரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனா். வடசென்னையில் ரூ.14.84 லட்சமும், மத்திய சென்னையில் ரூ.15.67 லட்சமும், தென்சென்னையில் ரூ.3.17 லட்சமும் பறிமுதல் செய்தனா். இதில், வெள்ளிக்கிழமை மட்டும் வடசென்னையில் ரூ.8.19 லட்சம், மத்திய சென்னையில் ரூ.5.89 லட்சம், தென்சென்னையில் ரூ.87 ஆயிரம் என மொத்தம் 14 லட்சத்து 95 ஆயிரத்து 920 ரூபாயை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.