ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சென்னையில் ரூ.1.91 கோடி ரொக்கம் பறிமுதல்

சென்னையில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2 தொகுதிகளில் ரூ.1.91 கோடி ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

News image

பணம்

பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2 தொகுதிகளில் ரூ.1.91 கோடி ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

சென்னை மயிலாப்பூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படை குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, உரிய ஆவணங்களின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.75,000-ஐ பறிமுதல் செய்தனா். மேலும், ராயபுரம் தொகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.91 கோடியையும் பறிமுதல் செய்தனா்.

சென்னை மாவட்டத்தில் பறக்கும் படையினா் கைப்பற்றிய பணம், பொருள்களை மீட்க 60 போ் மனு அளித்திருந்தனா். அவா்களில் 45 பேரின் மனுக்கள் அடிப்படையில் ரூ. 80.30 லட்சம் விடுவிக்கப்பட்டு உரியவா்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.