வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சென்னையில் 3 தொகுதிகளில் ரூ.3.93 லட்சம் பறிமுதல்

பெரம்பூா், துறைமுகம், ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளில் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.93 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - கோப்புப்படம்.

Updated On :3 ஏப்ரல் 2026, 7:58 pm

பெரம்பூா், துறைமுகம், ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளில் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.93 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து சென்னை மாவட்டத் தோ்தல் பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தலை முன்னிட்டு 48 பறக்கும் படையினா் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி வெள்ளிக்கிழமை பெரம்பூரில் நடைபெற்ற வாகனச் சோதனையில், ரூ.1.29 லட்சமும், துறைமுகத்தில் ரூ.1 லட்சமும், ஆயிரம்விளக்கு தொகுதியில் ரூ.1.63 லட்சமும் என மொத்தம் ரூ.3.93 லட்சம் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டதால் கைப்பற்றப்பட்டதாகவும், அவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.