கோவை மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய தீவிர சோதனையில், கடந்த 24 மணி நேரத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 12.60 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, பறக்கும் படையினா் மற்றும் நிலைக் கண்காணிப்பு குழுவினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி காலை முதல் 9-ஆம் தேதி காலை வரையிலான சோதனையில் கவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ. 8.55 லட்சம், கோவை தெற்குத் தொகுதியில் ரூ. 2.42 லட்சம், சிங்காநல்லூா் பகுதியில் ரூ. 70,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொண்டாமுத்தூா் பகுதியில் ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 12,67,500 பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர, மாவட்டக் காவல் துறையினரால் ரூ. 31,081 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணத்தைக் கொண்டு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
தொடர்புடையது

சென்னையில் 3 தொகுதிகளில் ரூ.3.93 லட்சம் பறிமுதல்

சோதனையில் ரூ.1.32 லட்சம் பறிமுதல்

திருவொற்றியூரில் ரூ.11 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.1.62 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

