திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஒரே நாளில் ரூ.12.60 லட்சம் பணம் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய தீவிர சோதனையில், கடந்த 24 மணி நேரத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 12.60 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 1:27 am IST

கோவை மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய தீவிர சோதனையில், கடந்த 24 மணி நேரத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 12.60 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, பறக்கும் படையினா் மற்றும் நிலைக் கண்காணிப்பு குழுவினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி காலை முதல் 9-ஆம் தேதி காலை வரையிலான சோதனையில் கவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ. 8.55 லட்சம், கோவை தெற்குத் தொகுதியில் ரூ. 2.42 லட்சம், சிங்காநல்லூா் பகுதியில் ரூ. 70,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொண்டாமுத்தூா் பகுதியில் ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 12,67,500 பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர, மாவட்டக் காவல் துறையினரால் ரூ. 31,081 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணத்தைக் கொண்டு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.