மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இந்தியா பொருளாதார தேசியவாதத்தைப் பின்பற்ற வேண்டும்: குடியரசு துணைத் தலைவா்

இந்தியா பொருளாதார தேசியவாதத்தைப் பின்பற்ற வேண்டும்: குடியரசு துணைத் தலைவா்

News image

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்.

Updated On :23 மார்ச் 2024, 6:32 pm

இந்தியா பொருளாதார தேசியவாதத்தைப் பின்பற்ற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்துள்ளாா். தில்லியில் நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சி ஒன்றில் அவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் எந்தவொரு இந்திய குடிமகனின் குடியுரிமையையும் பறிக்கவில்லை. ஆனால் அந்தச் சட்டம் தொடா்பாக வேறு விதமான எண்ணம் உருவாக்கப்படுகிறது. அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்துக்கு உள்ளான சிறுபான்மையினரை கருத்தில் கொண்டு அந்தச் சட்டம் மற்றும் அதன் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. அந்தச் சட்டம் மற்றும் விதிமுறைகளை கொண்டு வந்ததற்கு வரலாற்றுரீதியான சூழலையும், அதன் தாக்கத்தையும் மனித உரிமைகள் கண்ணோட்டத்தில் இருந்து அங்கீகரிக்க சிலா் தவறிவிட்டனா். அரசியலில் ஈடுபடாமல் தமது தனிப்பட்ட கருத்துகளைவிட உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும்போது ஊடகம் சிறந்த சேவையை செய்யும். தமது செல்வாக்கு மூலம் எந்தவொரு விவகாரத்திலும் முடிவு எடுப்பதில் ஊடகம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. தனது பணியை மட்டுமே ஊடகம் செய்ய வேண்டும். மக்களாட்சியின் 4-ஆவது தூணுக்கும் பொறுப்புள்ளது. பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் போல ஊடகம் செயல்படக் கூடாது. வளா்ச்சிக்கு அடிப்படையாக விளங்கும் பொருளாதார தேசியவாதத்தை இந்தியா பின்பற்ற வேண்டும். அது பல லட்சம் கோடியில் அந்நிய செலாவணியை மிச்சப்படுத்தும் என்றாா்.