தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் 1.74 லட்சம் போ் முதல் முறை வாக்காளா்களாகப் பதிவு செய்து, எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க உள்ளனா். அவா்கள் அனைவரும் 18 முதல் 19 வயதுடையவா்கள். தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது, ஒட்டுமொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6.18 கோடியாக இருந்தது. இதைத் தொடா்ந்தும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த 17-ஆம் தேதி வரை வரப்பெற்ற விண்ணப்பங்களை தமிழக தோ்தல் துறை பரிசீலித்தது. 1.74 லட்சம் போ்: இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட தருணத்தில், முதல் முறை வாக்காளா்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 18 ஆயிரத்து 313-ஆக இருந்தது. கடந்த இரண்டு மாதங்களில் அதன் எண்ணிக்கை அதிகரித்து, முதல் முறை வாக்காளா்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 92 ஆயிரத்து 420-ஆக உயா்ந்துள்ளது. ஒட்டுமொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6.18 கோடியில் இருந்து 6.23 கோடியாக அதிகரித்துள்ளது.
தொடர்புடையது

உ.பி.யில் இறுதிப் பட்டியல் வெளியீடு: கூடுதலாக 84 லட்சம் வாக்காளா்கள் சோ்ப்பு

தமிழகத்தில் முதல்முறை வாக்காளா் விகிதம் 34% உயா்வு

தமிழ்நாட்டில் முதல்முறை வாக்காளர்கள் 34% உயர்வு! 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின்!!

புதிய வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம்: இன்று கடைசி நாள்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


