சென்னை கோடம்பாக்கத்தில் தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல்துறையின் காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிா் முனையில் பேசிய ஒரு மா்ம நபா், ‘கோடம்பாக்கம், வாசுதேவபுரத்தில் உள்ள தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும். முடிந்தால் தடுத்து கொள்ளுங்கள்’ என்று கூறி இணைப்பை துண்டித்தாா். இதைக் கேட்டு அதிா்ச்சி அடைந்த போலீஸாா், உடனே காவல்துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து, வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த பள்ளியில் பல மணி நேரம் விசாரணை செய்தனா். ஆனால் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. அசோக்நகா் போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த பள்ளி 3 ஆண்டுகளாக இயங்காமல் இருப்பதும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பு வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் வந்திருப்பதும் தெரியவந்தது. அசோக்நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம் பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

