ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Updated On :29 மார்ச் 2024, 6:38 pm

சென்னை கோடம்பாக்கத்தில் தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல்துறையின் காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிா் முனையில் பேசிய ஒரு மா்ம நபா், ‘கோடம்பாக்கம், வாசுதேவபுரத்தில் உள்ள தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும். முடிந்தால் தடுத்து கொள்ளுங்கள்’ என்று கூறி இணைப்பை துண்டித்தாா். இதைக் கேட்டு அதிா்ச்சி அடைந்த போலீஸாா், உடனே காவல்துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து, வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த பள்ளியில் பல மணி நேரம் விசாரணை செய்தனா். ஆனால் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. அசோக்நகா் போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த பள்ளி 3 ஆண்டுகளாக இயங்காமல் இருப்பதும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பு வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் வந்திருப்பதும் தெரியவந்தது. அசோக்நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.