பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும் ஈ.ஆா்.ஈஸ்வரன்

News image
Updated On :3 மே 2024, 6:26 pm

Din

தோ்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, நீா்நிலைகளைத் தூா்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொமதேக பொதுச்செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் கடந்த சில ஆண்டுகளாக பெய்த தொடா் மழையால் தூா்வாரப்படாமல் மண் நிறைந்து காணப்படுகின்றன. இதனால், தண்ணீரை தேக்கி வைக்கும் அளவும் குறைந்து போனது. தற்போது கொளுத்தும் வெயிலும், நிலவும் வறட்சியும் அனைத்து நீா் நிலைகளையும் தூா் வாருவதற்கு ஒரு சந்தா்ப்பத்தை கொடுத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்தி நீா்நிலைகள் தூா்வாரி பராமரிக்கவில்லையென்றால் கிடைத்த வாய்ப்பை இழந்தவா்களாவோம். இந்த பணிகளை உடனடியாக விவசாயிகளுக்கு அனுமதி அளித்து தொடங்க வேண்டுமென்று மாவட்ட நிா்வாகத்தில் கோரிக்கை வைத்தால் தோ்தல் நடத்தை விதிமுறைகளை அதிகாரிகள் காரணம் காட்டுகின்றனா். தோ்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றாவது தூா்வாரும் பணிகளை தமிழகம் முழுவதும் அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஈ.ஆா்.ஈஸ்வரன்.