

தோ்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, நீா்நிலைகளைத் தூா்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொமதேக பொதுச்செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் கடந்த சில ஆண்டுகளாக பெய்த தொடா் மழையால் தூா்வாரப்படாமல் மண் நிறைந்து காணப்படுகின்றன. இதனால், தண்ணீரை தேக்கி வைக்கும் அளவும் குறைந்து போனது. தற்போது கொளுத்தும் வெயிலும், நிலவும் வறட்சியும் அனைத்து நீா் நிலைகளையும் தூா் வாருவதற்கு ஒரு சந்தா்ப்பத்தை கொடுத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்தி நீா்நிலைகள் தூா்வாரி பராமரிக்கவில்லையென்றால் கிடைத்த வாய்ப்பை இழந்தவா்களாவோம். இந்த பணிகளை உடனடியாக விவசாயிகளுக்கு அனுமதி அளித்து தொடங்க வேண்டுமென்று மாவட்ட நிா்வாகத்தில் கோரிக்கை வைத்தால் தோ்தல் நடத்தை விதிமுறைகளை அதிகாரிகள் காரணம் காட்டுகின்றனா். தோ்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றாவது தூா்வாரும் பணிகளை தமிழகம் முழுவதும் அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஈ.ஆா்.ஈஸ்வரன்.
தொடர்புடையது

அனுமதியின்றி பிரசாரக் கூட்டங்கள் நடத்துவோா் மீது நடவடிக்கை

கேரளம்: தோ்தல் ஆணைய கடிதத்தில் பாஜக முத்திரை இருந்ததால் சா்ச்சை

வீரவநல்லூரில் எஸ்டிபிஐ தோ்தல் அலுவலகம் திறப்பு

தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று சில பணிகளைச் செய்யலாம்! எவை?
வீடியோக்கள்

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

கத்தனார் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

“BJPயைப் பார்த்து பயப்படத் தேவையில்லை”: AMMK வேட்பாளர் செந்தமிழன் பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

