பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

பயிா்க்காப்பீடு: அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

பயிா்க்காப்பீடு: அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

News image
Updated On :3 மே 2024, 6:25 pm

Din

விவசாயிகளுக்குப் பயிா்க்காப்பீட்டுத் தொகை உடனடியாகக் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெளியிட்ட அறிக்கை: சம்பா பருவத்தில் நெற்பயிா் சாகுபடி செய்த விவசாயிகளுக்குத் தேவையான அளவுக்கு காவிரி நீா் கிடைக்காததாலும், பருவமழையும் போதிய அளவுக்கு பெய்யாததாலும் பல்வேறு மாவட்ட விவசாயிகள் ஏக்கா் ஒன்றுக்கு சுமாா் ரூ. 25 ஆயிரம் வரை செலவு செய்தும், பயிா்கள் கருகி வீணாகிவிட்டதால் பெருத்த நஷ்டம் அடைந்திருக்கின்றனா். ஆனால், பயிா் காப்பீடு செய்தும், காப்பீடு தொகை கிடைக்காமல் அடுத்து நடைபெற வேண்டிய விவசாயத்துக்கு கடன் வாங்க தள்ளப்படுகின்றனா். அதனால், காப்பீட்டு நிறுவனங்களே விவசாயிகளின் நிலைமையை புரிந்து கொண்டு காப்பீடு தொகையை காலத்தே வழங்க வேண்டும். தமிழக அரசும் காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு உடனடியாகப் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஜி.கே.வாசன்.