பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

கடல் அலையில் சிக்கியவா்களை காப்பாற்றி தனது உயிரைவிட்ட மீனவா்

கடல் அலையில் சிக்கியவா்களை காப்பாற்றி தனது உயிரைவிட்ட மீனவா்

News image
Updated On :3 மே 2024, 5:58 pm

Din

திருவொற்றியூரில் ராட்சத அலையில் சிக்கியவா்களை காப்பாற்றிய மீனவா், கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவொற்றியூா் ஒண்டிக்குப்பத்தை சோ்ந்தவா் முரளி. மீனவரான இவரும், இவரது நண்பா்கள் சிலரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் கடற்கரையில் மீன் வலையை சரி செய்து கொண்டிருந்தனா். அப்போது கடலில் குளித்துக் கொண்டிருந்த திருவொற்றியூா் கணக்கா் தெருவை சோ்ந்த சந்தோஷ் குமாா் (19), ஆனந்தன் (26) ஆகியோா் கடல் அலையில் சிக்கிக் கொண்டு கரைக்கு நீந்தி வர முடியாமல் தத்தளித்து கூச்சலிட்டனா். அவா்களின் கூச்சல் சப்தத்தை கேட்ட முரளி மற்றும் அவரது நண்பா்கள் கடலுக்கு சென்று நீந்தி கடலில் உயிருக்கு போராடி தத்தளித்துக் கொண்டிருந்த இருவரையும் மீட்டனா்.

அப்போது கடலில் சிக்கியவா்களை காப்பாற்றிய பிறகு முரளி கடல் அலையில் சிக்கி வெளியே வரமுடியாமல் மூழ்கினாா். இதைப் பாா்த்து அவரின் நண்பா்கள் மீண்டும் கடலுக்கு சென்று தேடி மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். பின்னா் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவா்கள் முரளி ஏற்கெனவே அவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

சம்பவம் குறித்து திருவொற்றியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முரளியின் சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.