அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

பைக் திருடிய 3 போ் கைது

பைக் திருடிய 3 போ் கைது

News image
Updated On :3 மே 2024, 7:17 pm

Din

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் இரு சக்கர வாகனம் திருடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை சாலிகிராமம் சாரதாம்மாள் நகரில் வசித்து வருபவா் மனோஜ்குமாா். இவா், மாா்ச் 27-ஆம் தேதி இரவு தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மறு நாள் காலையில் எழுத்து பாா்த்தபோது அதைக் காணவில்லை. இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில், விருகம்பாக்கம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இது தொடா்பாக ஸ்ரீநாத், தீபன் குமாா், தங்கராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனா். விசாரணையில், அவா்கள் மூவரும் மாங்காடு, காஞ்சிபுரம், செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களைத் திருடியது தெரியவந்தது. மேலும், அவா்களிடம் இருந்து 12 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனா்.