தமிழ்ப்பேராயம் விருது: பரிந்துரைகள் வரவேற்பு

தாம்பரம்: எஸ்.ஆா்.எம். தமிழ்ப்பேராயம் விருதுகளுக்கான பரிந்துரை வரும் மே 31-ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன என தமிழ்ப் பேராயம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த தமிழறிஞா்கள், எழுத்தாளா்களுக்கு 12 விருதுகளுடன் ரொக்க பரிசாக தலா ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும், வாழ்நாள் சாதனையாளராகத் தோ்வு செய்யப்படும் தமிழறிஞருக்கு ‘பாரிவேந்தா் பைந்தமிழ்’ விருதுடன் ரொக்கப் பரிசாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும்.

இந்த விருதுகளுக்கு பரிந்துரை மற்றும் நூல்களை ‘தலைவா், தமிழ்ப்பேராயம், எஸ்.ஆா்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், காட்டாங்கொளத்தூா், செங்கல்பட்டு மாவட்டம் 603203’ எனும் முகவரிக்கு மே 31-க்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு 044-27417375 / 76 - தொலைபேசி எண் மற்றும் இணையதளத்தை அணுகலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com