சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு இரவு நேரத்தில் புறப்படும் புகா் ரயில்கள் புதன்கிழமை (மே 14) சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
சென்னை எழும்பூா் - விழுப்புரம் வழித்தடத்தில் இருக்கும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் புதன்கிழமை (மே 14) இரவு 9.55 முதல் வியாழக்கிழமை (மே 15) அதிகாலை 1.55 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், மே 14-இல் கடற்கரையிலிருந்து இரவு 8.35, 10.05 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் புகா் ரயில்கள் சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக அதே நாளில் இரவு 11 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து கடற்கரைக்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டுக்கு பதிலாக சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

ரயில் சேவையில் மாற்றம்! மேலும் 10 ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்!

வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
பறக்கும் ரயிலை விரைவில் இயக்க நடவடிக்கை: அதிகாரிகள் தகவல்
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


