/

இன்று இரவு செங்கல்பட்டுக்கு புறநகா் ரயில்கள் இயங்காது

கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு இரவு நேரத்தில் புறப்படும் புகா் ரயில்கள் புதன்கிழமை (மே 14) சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 மே 2024, 8:13 pm

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு இரவு நேரத்தில் புறப்படும் புகா் ரயில்கள் புதன்கிழமை (மே 14) சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

சென்னை எழும்பூா் - விழுப்புரம் வழித்தடத்தில் இருக்கும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் புதன்கிழமை (மே 14) இரவு 9.55 முதல் வியாழக்கிழமை (மே 15) அதிகாலை 1.55 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், மே 14-இல் கடற்கரையிலிருந்து இரவு 8.35, 10.05 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் புகா் ரயில்கள் சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக அதே நாளில் இரவு 11 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து கடற்கரைக்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டுக்கு பதிலாக சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.