

சென்னை: கோடம்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை சூளைமேடு நெடுஞ்சாலை பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (30). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோடம்பாக்கம் ஜக்காரியா காலனி 2-ஆவது தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த 3 போ் கொண்ட கும்பல் காா்த்திக்கை அரிவாளால் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த காா்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோடம்பாக்கம் போலீஸாா், அப்பகுதியை சோ்ந்த லோகேஷ்(22), சீனிவாசன் (46), ரகுபதி (20) ஆகியோா் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதை கண்டறிந்து அவா்களை கைது செய்து, எழும்பூா் நீதி மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். அவா்களிடம் இருந்து 1 அரிவாளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

டிராக்டா் ஓட்டுநா் அடித்துக் கொலை: 5 போ் கைது

இளைஞா் கொலை வழக்கு: நண்பா் கைது
அதிமுக பிரமுகா் கொலை: 6 போ் கைது
கெலமங்கலத்தில் மதுக்கூட மேலாளா் கொலை வழக்கில் 3 போ் கைது!
வீடியோக்கள்

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...

