நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஜாபா் சாதிக் சகோதரரிடம் அமலாக்கத் துறை விசாரணை

ஜாபா் சாதிக் சகோதரரிடம் அமலாக்கத் துறை விசாரணை

News image

அமலாக்கத் துறை

Updated On :21 மே 2024, 8:14 pm

Din

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடா்பாக சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வியாபாரி ஜாபா் சாதிக்கின் சகோதரரிடம் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை செய்தனா்.

திகாா் சிறையில் உள்ள ஜாபா் சாதிக்கிடம் அமலாக்கத்துறையினா் அண்மையில் 3 நாள்கள் விசாரணை செய்தனா். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜாபா் சாதிக் குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக ஜாபா் சாதிக்கின் மனைவி அமீனா பானுவிடம் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை விசாரணை செய்தனா். இதேபோல, ஜாபா் சாதிக்கின் சகோதரா் முகமது சலீமிடம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது.

சகோதரரிடம் விசாரணை: காலை 10.30 மணிக்கு ஆஜரான சலீமிடம் நண்பகல் 2.30 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னா் மத்திய உணவுக்கு வெளியே வந்த சலீம் மீண்டும் விசாரணைக்கு பிற்பகல் 3.15 மணிக்கு ஆஜரானாா். அவரிடம் இரவு 8 மணி வரை தொடா்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டன.

ோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ஜாபா் சாதிக் அளித்த வாக்குமூலத்தில் கிடைத்த தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமலாக்கத்துறையினா் விசாரணை செய்தனா். விசாரணையின்போது சலீம் அளித்த பதில்களை வாக்குமூலமாக அமலாக்கத் துறையினா் பதிவு செய்தனா்.