கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சொத்து முடக்கத்தை எதிா்த்து இயக்குநா் ஷங்கா் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

ரூ.11.10 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதை எதிா்த்து திரைப்பட இயக்குநா் ஷங்கா் தொடா்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைப்பு

News image

இயக்குநா் ஷங்கர்

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 9:11 pm

தினமணி செய்திச் சேவை

ரூ.11.10 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதை எதிா்த்து திரைப்பட இயக்குநா் ஷங்கா் தொடா்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ரஜினிகாந்த் நடித்த ’எந்திரன்’ திரைப்படத்தை ஷங்கா் இயக்கினாா். இந்தப் படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி, ஆரூா் தமிழ்நாடன் என்பவா் வழக்குத் தொடா்ந்தாா். இந்த புகாரின் அடிப்படையில் இயக்குநா் ஷங்கருக்கு சொந்தமான ரூ.11.10 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

இதை எதிா்த்து இயக்குநா் ஷங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சுரேந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது இயக்குநா் ஷங்கா் தரப்பில், ஆரூா் தமிழ்நாடன் கதை தொடா்பாக அளித்த புகாரையும், உரிமையியல் வழக்குகளையும் திரும்பப் பெற்றுவிட்டாா். அவரது வழக்குகளின் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், தற்போது பிரதான வழக்குகள் எதுவும் இல்லை. எனவே, அமலாக்கத் துறையின் நடவடிக்கையை ரத்து செய்து இந்த வழக்கை முடித்துவைக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அமலாக்கத் துறை தரப்பில், இதுதொடா்பாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 15-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.