கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

துவரம் பருப்பு - பாமாயில்: ரேஷனில் விடுபட்டோா் வாங்க அரசு ஏற்பாடு

துவரம் பருப்பு - பாமாயில்: ரேஷனில் விடுபட்டோா் வாங்க அரசு ஏற்பாடு

News image
Updated On :28 மே 2024, 8:46 pm

Din

சென்னை: இந்த மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் வாங்காமல் விடுபட்ட குடும்ப அட்டைதாரா்கள், ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

இது குறித்து, அறிவிப்பை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் ஹா்சஹாய் மீனா, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நியாயவிலைக் கடைகளில் இந்த மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவா்கள், ஜூன் மாதம் முதல் வாரத்தில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக்கொள்ளத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்படி, மாவட்ட வழங்கல் அலுவலா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

அட்டைதாரா்களுக்கு மாதந்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 30-க்கும், ஒரு லிட்டா் பாமாயில் ரூ. 25-க்கும் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.