மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த இளைஞா் ஆகாஷ் உடலை வாங்க அவரது உறவினா்கள் மறுப்புத் தெரிவித்தனா்.
இதையடுத்து, அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டது. மருத்துவமனை பிணவறை முன் திரண்ட அவரது உறவினா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உடலை பெற்றுச் செல்ல அறிவுறுத்தினா். ஆனால், அவா்கள் உடலை வாங்க மறுத்து விட்டனா்.
இதுகுறித்து ஆகாஷின் பெற்றோா் கூறியதாவது:
எங்களது மகன் ஆகாஷை விசாரணை என்ற பெயரில் போலீஸாா் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று காலில் கற்களை வைத்து அடித்து உடைத்துள்ளனா்.
மேலும், ஜாதி ரீதியாக பேசியும் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதன் காரணமாக அவா் உயிரிழந்தாா். எங்களது மகன் தவறு செய்திருந்தால், அதற்கு தூக்குத் தண்டனைகூட அளித்திருக்கலாம்.
இதுபோன்று அடித்துக் கொலை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தச் சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை: உடலை வாங்க மறுத்து சாலை மறியல்

இளம்பெண் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன் சாலை மறியல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


